
10 அடிக்கும் உயரமாய் , நீளும் கண்ணாடி ஜன்னல்...
ஆதவன் , பூமியைத் தற்காலிகமாய் பிரிந்து செல்லும் நேரம்...
ஹேய் ,எவ்ளோ அழகாயிருக்கு , SUPERB ,WOW , FANTASTIC - வித விதமாய் குரல்கள்...
என்னதான் நடக்கிறது???? நாமும் பார்க்கலாமே என்று சென்றேன்...
அங்கு........
பொன்னை உருக்கி புடமிட்டது போன்ற வண்ணப் புடவையை அணிந்து ஜாலம் காட்டுகிறாள் ஆகாய அன்னை...
கோவைப் பழமாய் சிவந்திருக்கும் சூரியன்...
அத்தனை அழகும் ஒருங்கே சேர்ந்தாற்போல் காணக் கண் கோடி வேண்டுமென்றாலும்...
நாம் பார்ப்பது கேமராவின் கண்களால் MEGAPIXEL இல் மட்டுமே...
மறையத் தொடங்கும் 5 நிமிடத்திற்குள் ,
படம் பிடித்து "C " DRIVE இல் COPY செய்து,
FACEBOOK இல் UPDATION 2 நிமிடத்திற்குள்...
அடுத்த 1 நிமிடத்திற்குள் 10 LIKES , 4 COMMENTS...
UPDATE பண்ணியதோடு வேலை முடிந்தது...
அந்த படத்தை எத்தனை முறை திரும்பப் பார்க்கப் போகிறோம்???
பத்தோடு பதினொன்றாக இயற்கைக் காட்சிகளில் இதுவும் ஒன்று...
என்றோ ஒரு நாள் டெஸ்க்டாப்பிலோ இல்லை மொபைல் போனிலோ WALLPAPER -ஆக வரும் வாய்ப்புண்டு...
அத்தோடு சரி...
இயற்கையின் வனப்பை...
புறத்தின் கண்களால் படம் எடுத்து அகத்தில் பதிய வைக்க யாருக்கும் மனமில்லை...
எந்திரமயமான உலகத்தில் எந்திரம்தான் பார்க்கிறது , இரு விழி நமக்கிருந்தும்...
நினைத்துக்கொண்டே சொல்கிறேன் தோழியிடம்...
ஹேய் , என் MOBILE-ah மறந்துட்டேன் , போட்டோ எடுக்கணும் , இரு எடுத்துட்டு வரேன்... ;-)
No comments:
Post a Comment