Tuesday, July 28, 2015

யாதுமானாய்

நெடும்தவத்திற்கான வரம் அடையும்
பட்டாம்பூச்சியாய் மாறிவிட ஆசை,
உன் மௌனக்கூட்டை உடைக்கவாவது...
______
உனக்காக இயற்றப்படுவதை உணரா கவிதை
வீழ்ந்து மடிந்தது குப்பை தொட்டிக்குள்...
______
யாவிலும் நல்லவற்றயே காண வேண்டும்...
ஆதலால் நான் உன்னையே காண்கிறேன்...
______
நித்தமும்,
உனைத் தேடி அலைபாயும்,
என் இரு விழிகள்,
இமை சோரும் முன்...
உயிர் சேர வா...
______
உன் ஓரப்பார்வை
உன் இதழ் விரியாப்புன்னகை போதும்
நான் பெண்ணென்பதை உணர்த்த...
நாணம் சட்டென்று குடி கொள்கிறதே என்னுள்...
______