Friday, September 23, 2011

மழை தருமோ என் மேகம்

சில்லென்ற ஊதகாற்று ,வர்ண ஜாலங்கள் காட்டும் வானவில் ,நாசியை வருடும் இதமான மண் வாசனை ,கார் மேகம் புடை சூழ வானுக்கும் மண்ணுக்குமான பந்தமாய் சொட்டு சொட்டாய் வந்திறங்கியது செல்ல மழை.

தூறல்களின் ஊடே மாயக்கண்ணனின் மந்திரப்புன்னகையாய் ஒளிரும் மின்னல் ...

சப்தமாக சிரித்து விட்டேனா என்று கேட்டு மீண்டும் சிரிக்கும் இடி ...

புது மணப்பெண்ணாய் தலை கவிழும் பசும் இலைகள் ...

ரம்மியமான சூழல் ...

ரசித்து ஆர்ப்பரித்தது என் உள்ளம் ,அலுவலக நிசப்தத்தில்
ஜன்னலின் வழி பார்த்து ...

இதோ கிளம்பி விட்டேன்...

மயிலிறகாய் வருடும் மெல்லிசை, சூடான டீ , பஜ்ஜியுடன் நனைந்து கொண்டே மழையை துளித்துளியாக ரசிக்க வேண்டும்...ஆயிரம் கற்பனைகள் மனதில்

புதை மணல் போன்ற சேறு ,பல்லாங்குழி விளையாடத் தூண்டும் குண்டும் குழியுமான சாலைகளின் உபயத்தினால் நின்று அனுபவிக்க முடியவில்லை மழையின் பரவசத்தை , வரும் வழியில் .

முதல் வேலையாக சென்று மொட்டை மாடியில் மழையுடன் விளையாட வேண்டும் , ஓட்டம் பிடித்தேன் வீட்டிற்கு .

வாசலில் நான் நின்றவுடன் நின்றது மழையும் என்னுடன் ;-)






Thursday, September 22, 2011

Interior Designing

Some useful tips for Decorating your home:

1.Purchase the best your budget can afford.

2.Have a clear idea about what you want to purchase.

3.Allocate some budget(plan it well).

4.Draw the outline of your plan(Sketch your plan).

5.Color it according to your wish.

6.Purchase items that you need as per your plan.

7.Mix different colors and different kind of materials.It looks very natural if we are doing like that.It gives you a feel that you are in heaven.Painting the wall with same color makes you bored.Try something new and different.Show your creativity.

8.Refer some sites and magazines to get ideas.Don't confuse with colors and design.Choose your own.Don't be trendy.It will give a museum look.

9.Explore all the designing possibilities.Arrange the things in an orderly manner.

10.You can seperate a large room into smaller rooms wisely.

For more ideas...

http://www.seemydesign.com/

Tuesday, September 20, 2011

ஈஸி டிபன்

தேவையான பொருட்கள்:(2 பேருக்கு)

பால் அல்லது நீர்- 2 டம்ளர்
ஓட்ஸ் - 6 மேஜை கரண்டி
கருப்பட்டி - தேவையான அளவு

செய்முறை:

2 டம்ளர் நீருடன்(பாலுடன்) கருப்பட்டியை சேர்த்து கொதிக்க விடவும்.கருப்பட்டி நீரில் கரைந்ததும் அதை வடிகட்டி கொள்ளவும்.இந்த பாகுடன் 6 மேஜை கரண்டி ஓட்ஸ் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.சிறிது கெட்டியான பதம் வந்ததும் இறக்கி விடவும்.

ஓட்ஸின் நன்மைகள்:

கூடுதல் கொழுப்பைக் கரைக்கும்.

மேலும் தகவல்கள்:
http://ezinearticles.com/?The-Six-Benefits-of-Eating-Oatmeal&id=131731

Monday, September 19, 2011

பஸ் வந்துடுச்சு

காலை 6 மணிக்கு அலாரம் வைத்து எழுந்து அடித்து பிடித்து கிளம்பி பேருந்து நிலையத்திற்கு 8 மணிக்கு வந்தால் பேருந்து வரவில்லை.

சரி ,இன்னும் சிறிது நேரம் காத்திருக்கலாம் என்று பார்த்தால் நிமிடங்களின் கரைதலில் ஆடி அசைந்து வந்து நிற்கிறது எட்டே முக்காலுக்கு.அதுவும் ஸ்டாப்பில் நிற்காது.ஓடி முண்டியடித்து ஏறினால் நிற்பதற்கு கூட வழி இல்லை.

நாமாவது பரவாயில்லை.இன்னும் சில பேர் ஒரு படி மேல், சாரி படி மேல் இல்லை படிக்கு கீழ் .அதாங்க தொங்கிகிட்டே வருவாங்க.

சரி , ஏன் தொங்கிட்டு வரணும் அடுத்த பேருந்துக்கு வெயிட் பண்ணி வரலாமே என்று கேட்டால் கோவிலுக்கு போகவே தேவை இல்லை,ஆயிரம் அர்ச்சனைகள் நம் பேரில் நடக்கும்.

கலவையான சென்ட் வாசனை,கலந்து ஒலிக்கும் பேச்சுக்குரல்களின் ஊடே நிற்பதற்கு கூட இடமில்லாத நிலை.

அழகான பஞ்சு பொதியாய் உறங்கி கொண்டிருக்கும் மழலை , சில்லென்ற காற்று , சிவந்து நிற்கும் வானம் , வெண் புறாவாய் பரவி நிற்கும் மேகம் , சீருடை அணிந்த சிறார்களின் அணிவரிசை , வழியில் பார்த்த வாசல் கோலம்...எதையும் ரசிக்க முடியவில்லை கூட்டத்தில்.

காதில் மாட்டியிருக்கும் இயர் போனையும் தாண்டி ஒலிக்கின்றன குரல்கள்,இந்தாம்மா ,கொஞ்சம் நகண்டு நில்லு , கிண்டி ரெண்டு , செக் போஸ்ட் நிக்குமா?

"பயணச் சீட்டை பயணப்படுத்தியே பாதிப் பேருந்துப்பயணம் முடிந்து விட்டது".

ஹப்பா இனி பஸ்லயே போக கூடாது மனதிற்குள் முடிவெடுத்தேன்.

இதோ என் ஸ்டாப் வந்து விட்டது.இறங்கி ஓடினேன் அடுத்த பேருந்தை பிடிக்க ;-)