Wednesday, December 21, 2011

விழி தேடுகிறேன்...

நானோ நிறமின்றி இருக்கிறேன்...

இந்த
உடையின் நிறம் பிடிக்கவில்லை என்று குறைபடுகிறாய் நீ...

நானோ வெளிச்சம் இல்லாமல்
வாழ்கிறேன் ...

ஐயோ கண் கூசுகிறது என்று
சூரியனை வசை பாடுகிறாய் நீ...

அகக்கண்ணின் கற்பனையில் நான்...

கண் இருந்தும் கனவுகளுக்குள் நீ...

என்றோ ஓர் நாள் ஒரே புள்ளியில் இணைவோம்...

விழி தானத்தின் மூலம்!!!




6 comments: